/* */

சேந்தமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி பலி

சேந்தமங்கலம் அருகே லாரி மோதியதால் பால்பண்ணை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சேந்தமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதி பால் பண்ணை தொழிலாளி பலி
X

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (32). அவர் அக்கியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்தார்.

சம்பவத்தன்று அவர் வடுகப்பட்டி - அலங்காநத்தம் பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த சேந்தமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 3 Aug 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  3. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  4. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  5. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  8. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  9. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  10. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!