/* */

கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிப்பு

கொல்லிமலையில் நடைபெற்ற ஓரி விழாவில் திரளான பிரமுகர்கள் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் அரசு விழா ரத்து ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிப்பு
X

ஓரி விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள ஓரி சிலைக்கு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கொல்லிமலையில் நடைபெற்ற ஓரி விழாவில் திரளான பிரமுகர்கள் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளில் தமிழக அசின் சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா நடைபெறும். இந்த ஆண்டு கொரரோனா தொற்ற பரவல் காரனமாக விழாக்கள் தடை செய்யப்பட்டது. கொல்மலையில் உள்ள ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, சிற்றருவி போன்ற அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் 15 முக்கிய அமைப்புகளின் சார்பில் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வேட்டுவக்கவுண்டர்கள் சமூகத்தினர் உட்பட, அனுமதிபெற்ற அமைப்பினர் சமூக இடைவெளியை பின்பற்றி 5 பேர் வீதம் கலந்துகொண்டு, வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கி.பி. 200-ஆம் ஆண்டான கடைச்சங்க காலத்தில் கொல்லிமலையை ஆட்சிசெய்து வந்த ஓரி மண்ணன், வேட்டையின்போது தாம் எய்த ஒரே அம்பில், யானை, புலி, கலைமான், பன்றி, உடும்பு ஆகிய விலங்கினங்களை துளைத்தது என்று ஓரி மண்ணனின் வில் எய்தும் திறன் குறித்து புறநானூறு பாடல் கூறுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் ஆடிப்பெருக்க விழா கலையிழந்து காணப்பட்டது. நாமக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லிமலையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Updated On: 3 Aug 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது