/* */

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கொல்லிமலை ஆரியூர்நாடு, பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டுத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் கேட்பாரற்றுக் கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை தாமாக முன்வந்து போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையொட்டி மலைவாழ் மக்கள் பலரும் தங்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ஆரியூர்நாடு பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 3 லைசென்ஸ் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்றுக் கிடந்தன.

அவைகளை யார் அங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது தெரியவில்லை. பஞ்சாயத்து தலைவர் நாகலிங்கம், அந்த துப்பாக்கிகளை எடுத்துச் சென்று செம்மேட்டில் உள்ள வாழவந்திநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் துப்பாக்கிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்