/* */

இராசிபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பேர் கைது

இராசிபுரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 மாதங்களுக்குப் பின் பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இராசிபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில்  பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பேர் கைது
X

பைல் படம்.

இராசிபுரம் அருகே உள்ள, அணைப்பாளையம்-போடிநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில், கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சடலமாக கிடந்தவர் ராசிபுரம் அருகேயுள்ள பல்லவநாயக்கன்பட்டி கிராமம், மேற்கு வலசு அருந்ததியர் தெருவை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சரவணன் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையொட்டி போலீசார் நடத்திய தீவிர விசாரனையில், தொட்டியவலசு பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன் ( 45) என்பவர், முன் விரோதம் காரனமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி, மல்லூர் அருகே கார்த்திகேயன், அவருடைய நண்பர்கள் கோபிசங்கர் (36), பிரவீன்குமார் (35) உள்பட 4 பேர் சரவணனை தாக்கியதும், பின்னர் அல்லேரி முனியப்பன் கோவில் செல்லும் வழியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்திற்கு அவரைக் கடத்திச் சென்று அடித்துக்கொலை செய்து, உடலை மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்துச்சென்று அணைப்பாளையம் பகுதியில் ரோட்டில் வீசிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன், அவரது நண்பர்கள் கோபிசங்கர், பிரவீன்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கோபிசங்கர் மூக்குத்திப்பாளையம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் என்பதும், பிரவீன்குமார் செல்போன் கடை உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க