/* */

இராசிபுரத்தில் மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு எம்.பி உதவி

இராசிபுரம் பகுதியில், மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு, எம்.பி. ராஜேஷ்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் மழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு எம்.பி  உதவி
X

இராசிபுரம் பகுதியில், மழையால் வீடிழந்த குடும்பத்தினருக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய, எம்.பி. ராஜேஷ்குமார்.

இராசிபுரம் பகுதியில், கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கோனேரிப்பட்டி, 20வது வார்டு காலனி தெருவில் கோபால், ராணி மற்றும் பெரியசாமி, பழனியம்மாள், நடுத்தெரு தங்கவேல், பாப்பாத்தி மற்றும் 23 வார்டு அப்பு சந்து வாசு, பூங்கொடி ஆகியோரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இதனை அறிந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், வீடிழந்த 4 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர், தாசில்தார் கார்த்திகேயன், நகராட்சி கமிஷனர் கிருபாகரன், சுகாதார ஆய்வாளர் திருமூர்த்தி உள்ளிட்டோர், இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு