/* */

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்கள் கைது

ராசிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை  கடத்திய 2 வாலிபர்கள் கைது
X

ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில், ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டினர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை வைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராசிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (20), விக்னேஷ்வரன் (21) என்பதும், அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் தாத்தையங்கார்பேட்டை பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 3 July 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்