/* */

இராசிபுரத்தில் மனைவியை எரித்துக்கொலை செய்ய முயன்ற பெயிண்டர் கைது

இராசிபுரத்தில் மனைவியை எரித்துக்கொலை செய்ய முயன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

இராசிபுரத்தில் மனைவியை எரித்துக்கொலை செய்ய முயன்ற பெயிண்டர் கைது
X

இராசிபுரம் நகராட்சி, வி.நகர் 18-வது பகுதியில் வசித்து வருபவர் சாகுல் அமீது (39), பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா பீபி (29). இவர் நாமகிரிப்பேட்டையில் சத்துணவு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சாகுல் அமீது மனைவி பாத்திமா பீபியிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மனைவி பணம் தராததால் ஆத்திரமடைந்த சாகுல் அமீது, பாத்திமா பீபி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில், பலத்த தீக்காயமடைந்த பாத்திமா பீபியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் ராசிபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பெயிண்டர் சாகுல் அமீதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Feb 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  2. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  3. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  4. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  5. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  6. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  7. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  8. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  10. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை