/* */

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

நாமகிரிப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
X

நாமகிரிப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுந்தனர்.

நாமகிரிப்பேட்டை நகரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக சுவாமிக்கு பாலபிசேகம், சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் விரதம் இருந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தை டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. சுந்தரம், போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார், முத்தாயம்மாள் கலை கல்லூரி செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேரிழுத்தனர். திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 13 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!