/* */

கந்தம்பாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

கந்தம்பாளையம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கந்தம்பாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை
X

பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே குன்னமலை பஞ்சாயத்து இரும்பு பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கண்ணன் (27). இவர் கிளீனிங் பவுடர் விற்பனை செய்து வருகிறார். பெருங்குறிச்சி கருந்தேவம்பாளையத்தை சேர்ந்த மணி மகள் சத்யா (27). இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கண்ணனுக்கும், சத்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஜெயதேவ் (4) என்ற மகனும், ராஷ்மிகா (3) என்ற மகளும் உள்ளனர். கண்ணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வெறுப்படைந்த சத்யா, சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார். சத்யாவின் தந்தை மணி நல்லூர் போலீஸ் நிலையத்தில், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், மருமகன் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். திருமணமான 5 ஆண்டுகளுக்குள் பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து திருச்செங்கோடு சப் கலெக்டர் இளவரசி விசாரணை செய்து வருகிறார்.

Updated On: 27 Dec 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்