/* */

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு வெள்ளை கற்கல் கடத்தல்

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு வெள்ளை கற்கல் கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு  வெள்ளை கற்கல் கடத்தல்
X

கரூர் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிக்கு அரசு அனுமதியின்றி வெள்ளை கற்கள், லாரியில் கடத்தப்படுவதாக நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்க துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குனர் பூர்ணவேல் மற்றும் பரமத்தி போலீசார் பரமத்தி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் வெள்ளை கற்கள் (வெங்க செங்கல்) இருப்பதும், அவை கரூர் மாவட்டம் வெள்ளியனையில் இருந்து, அரசு அனுமதி பெறாமல், பரமத்திவேலூர் அருகே பில்லூரில் உள்ள கல் அரைக்கும் ஆலைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியை (38) போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்