/* */

ஜேடர்பாளையம் அருகே பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

ஜேடர்பாளையம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் அருகே பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு
X

கோப்பு படம் 

ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரைச் சேர்ந்தவர் பிரபு (30). டூ வீலரில் சென்று துணி வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் துணி வியாபாரம் செய்வதற்காக பிரபு வெளியூர் சென்று சென்று விட்டார். அவரது மனைவி லாவண்யா, சம்பவத்தன்று இரவு அதே ஊரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அடுத்த நாளை காலை, லாவண்யா அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம், நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Updated On: 1 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து
  2. நாமக்கல்
    பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை
  3. நாமக்கல்
    வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
  4. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  5. நாமக்கல்
    ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...
  7. திருவள்ளூர்
    குப்பை கழிவுகளால் ஏரி தண்ணீர் மாசுபடும் அபாயம்
  8. Trending Today News
    காற்றில் டைவ் அடித்த திமிங்கலம்..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.63 அடியாக சரிவு
  10. பொன்னேரி
    பழவேற்காடு அரசு மருத்துவமனையை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர்...