/* */

எஸ்.வாழவந்தி அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டு பொதுமக்கள் மறியல்

எஸ்.வாழவந்தி அரசு பள்ளிக்கு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

எஸ்.வாழவந்தி அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டு பொதுமக்கள் மறியல்
X

எஸ்.வாழவந்தியில் உள்ள, அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எஸ்.வாழவந்தி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 170- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளியாக‌ செயல்பட்டு வந்த பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது, இப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தும் போதிய வகுப்பறைகள் இல்லாததால் கலையரங்கம் பகுதியில் உள்ள மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்கு அருகே உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டக்கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும், நேற்று பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர், பள்ளியின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாலப்பட்டியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில், சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மோகனூர் தாசில்தார் தங்கராஜ், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம், மாவட்ட கல்வி அதிகாரி ராமன் ஆகியோர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதுரைவீரன், தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஈஸ்வரன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் அரசு அனுமதி பெற்று கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 30 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.