/* */

பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறிகளை செயல்பட்டு வந்த 4 கடைகளை, அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்!
X

பரமத்தி வேலூரில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக போலீசார் மற்றும் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு, தகவல் கிடைத்தது. இதையொட்டி ப.வேலூர் போலீஸ் டிஎஸ்.பி ராஜாரணவீரன் உத்தரவுப்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது. ப.வேலூர் திருவள்ளூர் ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 ஸ்டேஷனரி கடைகள், பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேட்டரி கடை மற்றும் அண்ணா சிலை அருகே உள்ள ஒரு பூட்டு சாவி சர்வீஸ் கடை ஆகிய 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அத்துடன், கடை ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Updated On: 12 Jun 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...