/* */

கபிலர்மலை கோயில் தேர் திருப்பணியில் முறைகேடு: அறநிலையத்துறை அலுவலர் சஸ்பெண்ட்

கோயில் நிர்வாகத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்த கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கபிலர்மலை கோயில் தேர் திருப்பணியில் முறைகேடு: அறநிலையத்துறை அலுவலர் சஸ்பெண்ட்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவில் உட்பட அப்பகுதியில் உள்ள 12 கோயில்களின் செயல் அலுவலராக கலைவாணி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கபிலர்மலை கோவில் திருத்தேர் சீரமைக்கும் பணி பொதுமக்களின் நன்கொடை மூலம் நடைபெற்றது. ஆனால், செயல் அலுவலர் கலைவாணி, இந்து சமய அறநிலையத்துறை நிதியை, திருத்தேர் திருப்பணிக்கு பயன்படுத்தி சீரமைத்ததாக கணக்கு காட்டி, பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

மேலும், அவரது கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களின் வரவு, செலவு கணக்குகளிலும் முறைகேடு செய்ததாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், செயல் அலுவலர் கலைவாணி ஒரு மாதம் லீவில் சென்று விட்டார். அதிகாரிகள் நடத்திய விசாணையில் கோயில் செயல் அலுவலர் கலைவாணி முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு மண்டல அறநிலையத்துறை இணை இயக்குனர் மங்கையர்க்கரசி, கபிலர்மலை கோயில் செயல் அலுவலர் கலைவாணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Updated On: 25 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’