/* */

கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி உயிரிழப்பு

கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில்  விழுந்ததால் விவசாயி உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகா, கந்தம்பாளையம் அருகே அருணகிரி பாளையம், ஓடக்காடு புதூரைச் சேர்ந்தவர் சண்முகம் (61), விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டிருந்தார். அந்த விவசாய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் ஓரம் உழவு செய்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி கிணற்றுக்குள் பாய்ந்தது. இதனால் தலையில் அடிபட்ட சண்முகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும், அங்கு வந்த திருச்செங்கோடு நிலைய தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து சண்முகத்தின் உடலை மீட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றில் விழுந்த டிராக்டர் மீட்கப்பட்டது. இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?