Begin typing your search above and press return to search.
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி உயிரிழப்பு
கந்தம்பாளையம் அருகே டிராக்டர் கிணற்றில் விழுந்ததால் விவசாயி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் தாலுகா, கந்தம்பாளையம் அருகே அருணகிரி பாளையம், ஓடக்காடு புதூரைச் சேர்ந்தவர் சண்முகம் (61), விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டிருந்தார். அந்த விவசாய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் ஓரம் உழவு செய்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி கிணற்றுக்குள் பாய்ந்தது. இதனால் தலையில் அடிபட்ட சண்முகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும், அங்கு வந்த திருச்செங்கோடு நிலைய தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து சண்முகத்தின் உடலை மீட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றில் விழுந்த டிராக்டர் மீட்கப்பட்டது. இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.