Begin typing your search above and press return to search.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
Protest News -பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
Protest News -தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காலம் கடந்த ஆய்வுகள், இரவு நேர ஆய்வுக்கூட்டங்கள், விடுமுறை தின ஆய்வுக்கூட்டங்கள், வீடியோ கான்பரன்ஸ் மற்றும் வாட்ஸ்அப் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தமிழக அரசு கைவிடவேண்டும். பணி செயல் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடும், உரிய கால அவகாசமும் வழங்கிட வேண்டும். தொடர்ச்சியாக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது பணிகளை திணிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. திரளான துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2