ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.15 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.15 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்
X
ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.15 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம் போனது.

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5,851 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ27.85 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.20.99 -க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.1,54,789க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 8,428 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.25-க்கும், குறைந்தபட்சமாக ரூ20- க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2,15,406-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story