/* */

பரமத்தி வேலூர் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பரமத்தி வேலூர் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து செல்லப்பட்டது.

HIGHLIGHTS

பரமத்தி வேலூர் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
X

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் ரோட்டில், தனியார் கல்லூரி அருகில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் பெருமாள். இவருடைய மனைவி விஜயலட்சுமி (52). இவர் சம்பவத்தன்று பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயலட்சுமியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு ரூ.500-ஐ கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். பணத்தை வாங்கிய அவர், மீதி பணத்தை கொடுப்பதற்கு கீழே குணிந்து, பணப்பெட்டியைத் திறந்து பணம் எடுத்துள்ளார்.

அப்போது, மர்ம நபர்கள் இருவரும், விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து புகாரின்பேரில் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்