பரமத்தி வேலூர் அருகே பெட்டிக்கடையில் இருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் ரோட்டில், தனியார் கல்லூரி அருகில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் பெருமாள். இவருடைய மனைவி விஜயலட்சுமி (52). இவர் சம்பவத்தன்று பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விஜயலட்சுமியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு ரூ.500-ஐ கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். பணத்தை வாங்கிய அவர், மீதி பணத்தை கொடுப்பதற்கு கீழே குணிந்து, பணப்பெட்டியைத் திறந்து பணம் எடுத்துள்ளார்.
அப்போது, மர்ம நபர்கள் இருவரும், விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து புகாரின்பேரில் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu