/* */

ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப சாவு

ஜேடர்பாளயைம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப சாவு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, சோழசிராமணியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (35), அவரது நண்பர்களுடன் அதிகாலை 5 மணியளவில் சோழசிராமணியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் ரோட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று வெங்கடாசலம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடாசலத்தை, காரை ஓட்டி வந்த தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த அருண்குமார் (27), காரில் கொண்டு சென்று திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம்போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Sep 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்