/* */

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற எஸ்எஸ்ஐ மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்த நீலகண்டன், ஒரு வழக்கு தொடர்பாக வெளியே சென்று விட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். சிறிது நேரத்தில் அவர் போலீஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது, நீலகண்டன் விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த எஸ்எஎஸ்ஐ மயங்கி விழுந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 Jun 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  2. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  3. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  5. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  6. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  7. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  8. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  9. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  10. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...