ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி
ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற எஸ்எஸ்ஐ மயங்கி விழுந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் நீலகண்டன். இவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் நிலையத்திற்கு வந்த நீலகண்டன், ஒரு வழக்கு தொடர்பாக வெளியே சென்று விட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். சிறிது நேரத்தில் அவர் போலீஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது, நீலகண்டன் விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த எஸ்எஎஸ்ஐ மயங்கி விழுந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.