ப.வேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.12.91 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை

ப.வேலூர் ஏல மார்க்கெட்டில் ரூ.12.91 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை
X

பைல் படம்

பரமத்திவேலூர் தேசிய எலக்ட்ரானிக்ஸ் ஏல மார்க்கெட்டில் ரூ.12.91 லட்சம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஏல மார்கெட்டில் ரூ.12 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. பரமத்திவேலூர் வெங்கமேட்டில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் உள்ளது. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17,172 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மறைமுக டெண்டரில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.19-க்கும், சராசரியாக ரூ.82.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13,78,324க்கு விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 16,320 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.26-க்கும், குறைந்தபட்சமாக ரூ.71.09-க்கும், சராசரியாக ரூ.81.70-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 ,91,235-க்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை நடைபெற்றது.

Tags

Next Story
ai marketing future