நாமக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

X
நாமக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற, உலக சுற்றுச்சூழல் தின விழாவில், டாக்டர் கவிதா கலந்துகொண்டுமரக்கன்றுகளை நட்டார்.
By - P.Nathan, Reporter |5 Jun 2022 6:15 AM IST
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், சுற்றுசூழல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், சுற்றுசூழல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விலங்கியல் துறை தலைவர் சர்மிளா பானு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர் கவிதா சரவணக்குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
தொடர்ந்து சுற்றுசூழலை காப்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில் விலங்கியல் துறை உதவி பேராசிரியர் புவனேஸ்வரி மற்றும் திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu