வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் காணிக்கை ரூ. 1.83 லட்சம்

வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்கள் காணிக்கை ரூ. 1.83 லட்சம்
X

பைல் படம்.

எஸ். வாழவந்தி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்களின் காணிக்கை 1.83 லட்சம் கணக்கிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 15 நாட்களாக தேர் திருவிழா நடைபெற்றது. இதை தொடர்ந்து நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர் மற்றும் தக்கார் பழனிவேல் தலைமையில், பக்தர்களின் முன்னிலையில், உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 49 கணக்கிடப்பட்டது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?