ஜேடர்பாளையம் செல்லும் பஸ்களை அதிகரிக்க கோரிக்கை

ஜேடர்பாளையம் செல்லும் பஸ்களை அதிகரிக்க கோரிக்கை
X
ஜேடர்பாளையத்திற்கு அதிகபட்ச பஸ் சேவை வேண்டும், வேண்டுகோள்

ஜேடர்பாளையம் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கணும்' - பொதுமக்கள் கோரிக்கை வலுப்பெறுகிறது

பரமத்தி வேலூர் பஸ் நிலையத்திலிருந்து ஜேடர்பாளையம் செல்லும் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது. தற்போது ப.வேலூர் பஸ் நிலையத்திலிருந்து தினமும் காலை 8:15 மணிக்கு பொத்தனூர், பாண்டமங்கலம் வழியாக ஜேடர்பாளையத்துக்கு ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பயணிக்கின்றனர்.

இந்த ஒரே பேருந்து சேவை காரணமாக, காலை 8:15 மணிக்கான பேருந்தைத் தவறவிட்டால், மீண்டும் இரண்டு மணி நேரம் காத்திருந்து 10:15 மணிக்கு இயக்கப்படும் அடுத்த அரசுப் பேருந்தில் மட்டுமே பயணிக்க முடியும். இந்த நிலை ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு செல்லும் தினக்கூலித் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

இந்த பிரச்சனைக்குத் தீர்வாக, காலை 9:00 மணிக்குப் பின் அடுத்தடுத்து ஜேடர்பாளையத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, காலை 9:00 மணிக்கு வெங்கரை செல்லும் அரசுப் பேருந்தின் வழித்தடத்தை நீட்டித்து, ஜேடர்பாளையம் வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை இந்தக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்து சேவைகளை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

Tags

Next Story