/* */

நிலங்களுக்கு பட்டா கேட்டு பழங்குடியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்கள் பயிர் செய்யும் நிலங்களுக்கு பட்டா கேட்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நிலங்களுக்கு பட்டா கேட்டு பழங்குடியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பார்க் ரோட்டில், தமிழ்நாடு பழங்குடியின மக்கள் முன்னற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ரங்கநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தனியார் நிறுவனம் பதிவு செய்துள்ள பழங்குடி மக்களின் நிலங்களின் போலிப் பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழங்குடி மக்கள் பயிர் செய்து வரும் நிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கண்டிசன் பட்டாக்களை மாற்றி நிலப்பட்டா வழங்க வேண்டும்.கொல்லிமலையில் சாதிச் சான்றிதழ் இல்லாமல் இனி எந்த பத்திரப் பதிவும் செய்யக்கூடாது என கொல்லிமலை சார் பதிவாளர் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும். பழங்குடி மக்கள் பயிர் செய்யும் புறம்போக்கு நிலங்களுக்கு உடனடியாக நிலப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்