மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு
![மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு](https://www.nativenews.in/h-upload/2023/09/18/1781598-accident.webp)
விபத்துக்கான மாதிரி படம்
நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி மேட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சின்னுசாமி (72). இவரது மனைவி கண்ணம்மாள். இவர்கள் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சின்னுசாமி அவரது மேட்டுக்காட்டில் உள்ள மேய்ச்சல் தரையில், ஆடுகளை மேய்த்துக்கொண்டு, மெயின் ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நபர் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
இந்த விபத்தில் கீழே விழுந்த சின்னுசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu