/* */

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு

கந்தம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு
X

விபத்துக்கான மாதிரி படம் 

நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி மேட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சின்னுசாமி (72). இவரது மனைவி கண்ணம்மாள். இவர்கள் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சின்னுசாமி அவரது மேட்டுக்காட்டில் உள்ள மேய்ச்சல் தரையில், ஆடுகளை மேய்த்துக்கொண்டு, மெயின் ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நபர் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

இந்த விபத்தில் கீழே விழுந்த சின்னுசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவரை தேடி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?