பள்ளிப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளர் கைது

X
By - Gowtham.s,Sub-Editor |28 March 2025 10:50 AM IST
கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 1 கிலோ கஞ்சா பறிமுதல்
- பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில் போலீசார் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது ஒடிசாவைச் சேர்ந்த 45 வயதான லட்சுமிதாஸ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், லட்சுமிதாஸ் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததோடு, தனது வருமானத்தை அதிகரிக்க கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை குற்றத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu