/* */

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்
X

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி (பைல் படம்)

நாமக்கல்-மோகனூர் மெயின் ரோட்டில், அணியா புரத்தில், தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு மோகனூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது ஏடிஎம் மையத்தை கண்காணித்தனர்.

அப்போது ஏடிஎம் மையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரனை நடத்தினார். விசாரணையில் அவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.

அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார் அவரிடம் தீவி விசாரனை நடத்தினார்கள். அப்போது அவர் பீகார் மாநிலம் கிழக்கு சாம்ரான் பகுதியைச் சேர்ந்த உபேந்தராராய் (28) என்பதும்,

அவர் பரளியில் உள்ள ஒரு கோழித்தீவன ஆலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் ஏடிஎம்இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து ஏடிஎம் மையத்தின் பொறுப்பாளர் கணக்கம் பானையத்தை சேர்ந்த மோகன் குமார் கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உபேந்தராராயை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

Updated On: 6 Aug 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!