ரத்ததானம் வழங்கிய 44 பேருக்கு பாராட்டு சான்று: கலெக்டர் வழங்கல்

ரத்ததானம் வழங்கிய 44 பேருக்கு   பாராட்டு சான்று: கலெக்டர் வழங்கல்
X

 பட விளக்கம் : ரத்த தானம் வழங்கிய, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழிக்கு, மாவட்ட கலெக்டர் உமா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.

ரத்ததானம் வழங்கிய 44 பேருக்கு பாராட்டு சான்று: கலெக்டர் வழங்கல்

நாமக்கல்,

ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.

நாமக்கல் மாவட்டத்தில், ரத்த தானம் வழங்கிய 44 கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரத்த தானம் வழங்கிய 44 கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 54 முகாம்கள் நடத்தப்பட்டு 4,912 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் 29 முகாம்கள் நடத்தப்பட்டு 1,762 யூனிட் ரத்தமும், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 22 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,390 யூனிட் ரத்தமும் தானமாக பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டிஆர்ஓ சுமன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தாஅருள்மொழி, மாவட்ட ரத்த வங்கி அலுவலர் அன்புமலர், ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business