காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி பேசினார்.

காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாய சங்க நாமக்கல் மாவட்டக்குழு, நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் அன்புமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர், செல்வராஜ், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மாநில துணைத்தலைவர் ரகுமையா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைறேவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் காவிரி உபரி நீரை காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீரை தேக்கி விவசாயிகள் பயன் பெற செய்ய வேண்டும். நாமக்கல் மாநகராட்சி கழிவுநீர் நேரடியாக விவசாய விளைநிலங்கள் வழியாக சென்று தூசூர் ஏரியில் கலப்பதால் சுற்றுச்சூழல், விவசாய விளைநிலங்கள் மற்றும் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதை தடுத்து நிறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். நாமக்கல், மோகனூர் ரோட்டில் இயங்கி வந்த மாவட்ட அரசு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மாற்றப்பட்ட மருத்துவமனையை முன்பு இயங்கி வந்த இடத்திலேயே முழுநேரமும் செயல்படக் கூடிய மருத்துவமனையாக செல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story