நாமக்கல்லில் மளிகை கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

நாமக்கல்லில் மளிகை கடை உரிமையாளர்களுக்கான  விழிப்புணர்வு கூட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற மளிகைக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில், போலீஸ் டிஎஸ்பி தனராசு பேசினார்.

நாமக்கல் பகுதியில் உள்ள மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பகுதியில் உள்ள மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் டவுன் போலீஸ் டிஎஸ்பி தனராசு கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது, சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் கூட்டத்தில் பேசும்போது, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியம், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வியாபாரம் முடிந்து இரவு நேரத்தில் கடைகளை பூட்டிவிட்டு செல்லும்போது, எக்காரணம் கொண்டும் ரொக்கப் பணத்தினை கடைகளில் வைத்து செல்ல வேண்டாம். கடை ஷட்டரில் சென்டர் லாக் பொருத்தி திருட்டினை தடுக்க வேண்டும். மேலும், வணிகர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்கள் உறுதியேற்க வேண்டும், அவ்வாறு விற்பனை செய்வோர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் மாவட்ட காவல்துறைக்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணை தலைவர் ஜிக்கி ஜெகதீசன், பேரமைப்பு மாவட்ட செயலாளர் பொன். வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மளிகைக் கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story