விவசாய நிலத்தை கைப்பற்றி ஏலம் விட முயற்சி: வங்கி மேலாளர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

பைல் படம்
தவறான நடைமுறையில், விவசாய நிலத்தை கைப்பற்றி ஏலம் விட முயற்சி செய்த தனியார் வங்கி மேனேஜரை கோர்ட்டில் ஆஜராகி பதிலளிக்க நுகர்வோர் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிடாரம் கிராமத்தில் வசிப்பவர் வெங்கடாசலம் (57). இவருக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் விவசாய நிலத்தின் அசல் ஆவணங்களை கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் அடமானம் வைத்து நாமக்கல்லில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் விவசாய கடன் ரூ. 50 லட்சம் பெற்றுள்ளர். கடன் விண்ணப்பத்திலும் வங்கியின் சரிபார்ப்பு அறிக்கையிலும் விவசாய கடன் என குறிப்பிடப்பட்டுள்ளளது.
விவசாய விளைச்சல் சரியாக இல்லாத காரணத்தால் வங்கியில் ஒப்புக்கொண்டபடி தவணைத் தொகைகளை சரியாக செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் வங்கி நிர்வாகம் சர்பாசி சட்டப்படி அவர்களது விவசாய நிலத்தை சுவாதீனம் எடுத்து ஏலம் விட உள்ளதாக கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்து வங்கிக்கு சென்று விவசாய நிலங்களை சர்பாசி சட்டத்தின் கீழ் ஏலம் விட முடியாது என தெரிவித்தபோது. வங்கியின் சார்பில் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும், கடனை புதுப்பிக்க எவ்வித கையெழுத்தும் செய்யாத நிலையில் கடனை வங்கியே புதுப்பித்துள்ளது. விவசாய கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நிலங்களை, விவசாயம் அல்லாத கடன் பெறப்பட்டதுபோல் ஆவணங்களை உருவாக்கி, சொத்தைக் கைப்பற்றி ஏலத்துக்கு விட வங்கி முயற்சித்துள்ளது. வங்கியின் தவறான நடவடிக்கையால் நிலம் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், தனக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வங்கி வழங்க வேண்டும் என்றும், வெங்கடாசலம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ், கடன் வழங்கிய தனியார் வங்கியின் கிளை மேலாளரும், உயர் அலுவலர்களும் வரும் ஆகஸ்ட் 30 அன்று கோர்ட்டில் ஆஜராகி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu