மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் பொத்தனூரில் 31ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் பொத்தனூரில் 31ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
X

பொத்தனூரில் நடைபெற்ற மதிமுக 31ம் ஆண்டு தொடக்கவிழாவில், கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் கட்சியின் 31ம் ஆண்டு தொடக்க விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் கட்சியின் 31ம் ஆண்டு தொடக்க விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில், கட்சியின் 31ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் விழா ப.வேலூர் அருகில் உள்ள பொத்தனூரில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் கணேசன் தலைமை வகித்தத். மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்திய தேவன் சிறப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மேற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிறுவனப்பட்ட கொடிக்கம்பங்களில் மதிமுக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

மதிமுக 31 ஆண்டுகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதியம்12 மணிக்கு ஆரம்பித்து வழிநெடுக, 20க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்து, தற்போது இரவு 9 மணிக்கு பொத்தனூரில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நாங்கள் பதவி கிடைக்கும் என்று இந்த கட்சிக்கு வரவில்லை. பதவி கிடைத்தவர்கள் எல்லாம் சுகத்தை அனுபவித்து விட்டு சென்று விட்டார்கள். பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் கரத்தை வலுப்படுத்தவே நாங்கள் இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் எத்தனையோ கட்சி ஆரம்பித்து, தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்டது ஆனால் இந்த மதிமுக இயக்கம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது அவர்தான் துரை வைகோ எம்.பி., அவரது வழிகாட்டுதலின்படி தமிழக மக்களின் நலனுக்காக மதிமுக என்றென்றும் செயல்படும் என அவர் கூறினார். திரளான மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story