புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 மது பாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 மது பாட்டில்கள் பறிமுதல்
X
புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட, ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள 180 பிராந்தி பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து, கொல்லிமலையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட, ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள 180 பிராந்தி பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து, கொல்லிமலையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து, நாமக்கல் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, நாமக்கல் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ. மனோகரன் ஆகியோர், ஆத்தூர் - நாமக்கல் மெயின் ரோட்டில் ஆயில்பட்டி அருகே வாகனத் தனிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 750 மி.லி. கொண்ட, 180 பிராந்தி பெட் பாட்டில்கள் கடந்த வரப்பட்டது தெரியவந்தது.

இதையொட்டி காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, வலப்பூர்நாடு அசக்காட்டுப்பட்டியை சேர்ந்த இளங்கோவன் (33), அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் (27) ஆகிய 2 பேரையும்போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாண்டிச்சேரியில் குறைந்த விலைக்கு பிராந்தி பாட்டில்களை வாங்கி வந்து, அவற்றை நாமக்கல் பகுதியில், கள்ள மார்க்கெட்டில், அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் கடத்தி வரப்பட்ட பிராந்தி பாட்டில்கள் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story