/* */

பள்ளிபாளையம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை

வட மாநில ஆர்டர்கள் இல்லாததால் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை
X

பவர்லூம் தறி (மாதிரி படம் )

பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வெடியரசம்பாளையம்பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன.

தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளி மாநில குறிப்பாக வட மாநிலங்களுக்கான விற்பனை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால், இப்பகுதியில் இயங்கி வந்த விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விசைத்தறி உரிமையாளர் ஒருவர் கூறும்போது, நாங்கள் உற்பத்தி செய்யும் துணிகள் குஜராத், லக்னோ, டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வட மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு விற்பனை சரிந்துள்ளது. அதனால் எங்களுக்கு ஆர்டர் குறைந்துவிட்டது. ஊரடங்கும் அறிவித்துவிட்டதால் அங்கிருந்து ஆர்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் உற்பத்தி செய்த துணிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. கூடுதலாக உற்பத்தி செய்து இருப்பு வைத்தால் நஷ்டம் வரும். அதனால், விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளோம் என்றார்.

Updated On: 23 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. அரசியல்
    தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
  10. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...