குமாரபாளையம் அருகே பழனி பாதயாத்திரை காவடி பூஜை

குமாரபாளையம் அருகே பழனி பாதயாத்திரை காவடி பூஜை
X

குமாரபாளையம் அருகே பழனி பாதயாத்திரை காவடி பூஜை நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே பழனி பாதயாத்திரை காவடி பூஜை நடைபெற்றது.

இடைப்பாடி பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் செல்லும் இந்த யாத்திரையில் பழனிக்கு சென்று, ஒரு நாள் இரவு முழுவதும் பழனி மலை மீது தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து வருவார்கள்.

இந்த சமூகத்தினருக்கு மட்டும் பழனி மலையில் குறிப்பிட்ட ஒரு நாள் இரவு தங்க அனுமதிக்கப்படுகிறார்கள் என கூறப்படுகிறது. அங்கேயே பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருவார்கள். இந்த ஆண்டிற்கான பாதயாத்திரை நேற்று துவங்கி இடைப்பாடியில் இருந்து தேவூர், ஆயிக்கவுண்டம்பாளையம், பல்லக்காபாளையம், ரங்கனூர், வழியாக சென்றனர். இவர்களுக்கு ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதி முருக பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கபட்டது.

இவ்வழியே வந்த காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேளதாளத்திற்கு ஏற்றவாறு பக்தர்கள் காவடியாட்டம் ஆடியது பக்தர்களை பரவசமடைய செய்தது. காவடி எடுத்து வந்த பக்தர்கள் சுமார் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாதயாத்திரை பலன்கள் குறித்து பக்தர்கள் கூறுகையில், பழனி ஒரு புண்ணிய பூமி. சித்தர்கள் வாழந்திருந்த இடம். அதன் மீதுதான் அழகும் இளமையும் கொண்ட 'தண்டாயுதபாணி' என்ற முருகனை மலை உச்சி மீது இருந்த பதினெட்டு சித்தர்களில் ஒருவரான 'போகர்' என்ற சித்தர் பிரதிஷ்டை செய்து உள்ளார். 'போகர்' அற்புதமான சித்தர். 'இலாயிரம்' மற்றும் 'போகர் பன்னிராயிரம்' என்ற இலக்கியத்தை படைத்தவர். இன்றைக்கும் கூட யாருமே அறிந்திராத வகையில் உள்ள ஒன்பது நவபாஷம் என்ற கடுமையான விஷங்களைக் கொண்டு அந்த சிலையை செய்து உள்ளார்.

உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கில் மக்கள் வந்து அங்கு வணங்கும் வகையில் அந்த சிலை தெய்வீகத் தன்மையைப் பெற்று உள்ளது. அந்த சிலையை வந்து வணங்குவது புராணப் பழக்கங்களில் ஒன்று. 'திருமுறுகாற்றுப் படை'யில் 'மகாலஷ்மி', 'காமதேனு', 'இந்திரன்' போன்றவர்கள் 'அவினான்குடி' என்ற பழனிக்குச் சென்று வழிபட்டதாகக் கூறப்பட்டு உள்ளது.

அந்த தெய்வ பழக்க முறையை தொடர்ந்தே மக்கள் இந்த மலை மீதான ஆலயத்திற்கு சென்று இந்தப் பிறவியில் வளம் பெற்று வாழவும் அடுத்த பிறவியின் இரகசியங்களை அறிந்து கொள்ளவும் செல்கின்றனர். 'அருணகிரிநாதர்' என்ற துறவி 'இகப்பரசுபாக்கியம் அருள்வாயா' எனப் பாடுகிறார்.

முருகனைப் பல வழிகளிலும் வழிபடலாம் என்றாலும் பக்தி மார்க வழிபாடே சிறந்த மார்கம். பாத யாத்திரை என்ற நடைப் பயணம் அதில் ஒரு மார்கம். கடவுளின் அருளைப் பெறுவதற்காகவே உண்மையில் பாத யாத்திரை செய்கின்றனர். ஒவ் ஒருவருக்கும் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அவரை வணங்குவதின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற அவரை வணங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
ai in future agriculture