/* */

வெள்ளம் பாதித்த மக்களை சந்தித்து அறுதல் கூறிய அமைச்சர்

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களை சந்தித்து அமைச்சர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் ஆறுதல் கூறினார்கள்

HIGHLIGHTS

வெள்ளம் பாதித்த  மக்களை சந்தித்து அறுதல் கூறிய அமைச்சர்
X

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு மக்களை சந்தித்து அமைச்சர் வேந்தன், கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மகேஸ்வரன், மற்றும் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆறுதல் கூறி உணவு வழங்கினார்கள்

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 161 குடும்பங்களை சேர்ந்த 436 பேர் புத்தர் தெரு நகராட்சி பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் டாக்டர் மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

அப்போது அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி கரையோர பகுதி மக்கள் மழை மற்றும் காவிரி வெள்ளத்தால் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாற்று இடம் கேட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஓராண்டிற்குள் பணி முடிந்ததும், விண்ணப்பங்களின் பரிசீலனை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி, நகர தி.மு.க. செயலர் செல்வம், கவுன்சிலர் ரங்கநாதன், அம்பிகா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 31 Aug 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!