/* */

இரண்டு வீடுகளில் தீ விபத்து : தீயில் எரிந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள்

குமாரபாளையம் அருகே இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

HIGHLIGHTS

இரண்டு வீடுகளில் தீ விபத்து : தீயில் எரிந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள்
X

குமாரபாளையம் அருகே இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில் தீயில் எரிந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஆயிகவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர்கள் கந்தன், 50, முத்துவீரதுரைசாமி, 50. கூலித்தொழிலாளிகள்.

அருகருகே உள்ள சிமெண்ட் அட்டை மற்றும் தகர சீட் போட்ட இரு வீடுகளில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நேற்று காலை இரு வீட்டாரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். நேற்று மாலை 12:45 மணியளவில் இரு வீடுகளில் திடீரென்று தீப்பிடித்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இரு வீடுகளில் உள்ள துணிமணிகள், பீரோ, பீரோவில் வைத்திருந்த பத்திரம், ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்ட தஸ்தாவேஜிகள் தீயில் எரிந்து சேதமாகின. வீட்டின் உரிமையாளர்கள் தகவல் அறிந்து வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த தீ விபத்திற்கு காரணம் உயர் அழுத்த மின் மின் கசிவு என கூறப்படுகிறது.

Updated On: 19 Feb 2023 3:10 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...