/* */

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

பெறப்பட்ட மனுக்கள் மீது ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்
X

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், வீட்டு வரி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி, குடிநீர், பாதாள சாக்கடை சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 116 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டது.

பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார். சென்ற குறைதீர்க்கும் முகாமில், பெறப்பட்ட 117 மனுக்களில் 105 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மீதமுள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இம்முகாமில், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் மனோகரன், சுகாதாரஅலுவலர் விஜயகுமார், உதவிப்பொறியாளர் குழந்தைவேலு உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு