/* */

மதுரை அருகே நெசவாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி- பரபரப்பு

நெசவாளர் கடன் தொல்லையால் திருப்பரங்குன்றம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

மதுரை அருகே நெசவாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி- பரபரப்பு
X

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் மனைவி ரோஷினி. இவருக்கு நிகிதா, கார்த்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். ரவீந்திரன் அதே பகுதியில் நெசவு தறி நெய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் பெரிய வருமானம் இல்லாததால், கடன் சுமை அதிகரித்துள்ளது. இதில் ,விரக்தி அடைந்த ரவீந்திரன், குடும்பத்துடன் மதுரைக்கு வந்து திருப்பரங்குன்றம் மலையை சுற்றி வரும் கிரிவலப்பாதை அருகே தன் மனைவி, மகள்கள் என தனது குடும்பத்தினருடன் விஷம் அருந்தியுள்ளனர்.

பின்னர், அவர்கள் அழுது புலம்புவதை கண்ட அங்கிருந்த சாமியார்கள், திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பரங்குன்றம் காவல்துறையினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம், திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது