/* */

அலங்காநல்லூர் வட்டாரத்தில் கிராம சபைக் கூட்டங்கள்

அலங்காநல்லூர் பகுதியில், தொழிலாளர் தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

HIGHLIGHTS

அலங்காநல்லூர் வட்டாரத்தில் கிராம சபைக் கூட்டங்கள்
X

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளம் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டம்.

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 37 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

வடுகபட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் , துணைத் தலைவர் அன்புமுத்து, பற்றாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பங்கஜவள்ளி தீர்மானங்களை வாசித்தார்.

அய்யங்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், துணைத் தலைவர் முருகேசன், பற்றாளர் வடிவு ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் தெய்வேந்திரன் தீர்மானங்களை வாசித்தார்.

தனிச்சியம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு மாரி செல்லப்பாண்டி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் மணிவண்ணன், பற்றாளர் ஶ்ரீபிரியா ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் ராஜாங்கம் தீர்மானங்களை வாசித்தார்.

கொண்டையம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் ரெங்கராஜன், பற்றாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் பங்கஜவள்ளி தீர்மானங்களை வாசித்தார்.

சின்னஇலந்தைகுளம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் மெர்லின் விமலா குமாரி, கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன், பற்றாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் சுவிதா தீர்மானங்களை வாசித்தார்.

கல்லணை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அய்யம்மாள், யூனியன் உதவி பொறியாளர் துர்காம்பிகை, ஒன்றிய கவுன்சிலர் சுப்பராயலு உள்ளிட்டா பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன் தலைமையில் ஊராட்சி செயலாளர் ராஜா தீர்மானங்களை வாசித்தார்.

அச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீசுதா முருகன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகேஸ்வரி கலந்து கொண்டு தீர்மானங்களை வாசித்தார்.

15.பி.மேட்டுபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீபா நந்தினி மயில்வீரன் தலைமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் தீர்மானங்களை வசித்தார்.

எர்ரம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை வசதி, பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 1 May 2023 1:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது