/* */

சோழவந்தானில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம்: போலீஸ் எஸ்.பி. ஆய்வு

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சோழவந்தானில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம்: போலீஸ் எஸ்.பி. ஆய்வு
X

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மதுரை அடுத்து சோழவந்தானில் மிக பெரிய அளவில் நடை பெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பினை தொடர்ந்து வருகின்ற 16ம் தேதி சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனகை நாராயணபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இறங்க உள்ளார். அதற்காக கடந்த சில தினங்களாக சோழவந்தான் வைகை ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணி அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பாகவும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் சார்பாகவும்.நடைபெற்று வருகிறது அதனை தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சோழவந்தானில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க இடத்தை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார். உடன் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர். பேரூராட்சி சார்பாக அதிகாரிகளும் இந்துசமய நலத் துறை சார்பாக அதிகாரிகளும் உடன் இருந்து ஏற்பாடுகளை பார்வையிட்டனர். பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் டீக்கடைகணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 15 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு