வாடிப்பட்டி பகுதிகளில் குப்பைகள் தேக்கம்; பொதுமக்கள் புகார்

வாடிப்பட்டி பகுதிகளில் குப்பைகள் தேக்கம்; பொதுமக்கள் புகார்
X

இடம் இல்லாமல் எரியவிடப்படும் குப்பைகள்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் குப்பைகளை கொட்டுவதற்கு நீண்டநாட்களாக அதற்கென இடம் இல்லாத நிலை உள்ளது. இதனால், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை எடுத்துச்செல்ல முடியாமல் தெருக்களிலேயே தேங்கி சுகாதார கேட்டினை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டபொழுது, குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடம் இல்லை என தெரிவிக்கின்றனர்.

வாடிப்பட்டி பேரூராட்சியில் இவ்வளவு ஆண்டுகாலமாக குப்பைகள் ஒழுங்காக எடுக்கப்பட்டு வந்தது. இப்போது மட்டும் ஏன் அது தடைபட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது, சுமார் இரண்டு கோடி செலவில் குப்பை கிடங்கு வாடிப்பட்டி பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆகையால், மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு வாடிப்பட்டி பேரூராட்சியில், குப்பை கிடங்கு தனியாக அமைத்து குப்பைகளை சேகரித்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
which business case is better solved by ai