வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது
X
By - K.Rajeshwari,Reporter |15 July 2021 5:30 PM IST
வேப்பனப்பள்ளி அருகே, 12 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீஸ் எஸ்.ஐ.சந்துரு மற்றும் போலீசார், நேற்றுமாலை வேப்பனப்பள்ளி அடுத்த பண்ணப்பள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா வைத்துக் கொண்டிருந்த தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் நாராயணசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் இருவரிடம் இருந்து 12000 ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu