/* */

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே குடும்பத்தகராறில், 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து  தாய் தற்கொலை!
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள செங்கோட சின்னணுள்ளி அடுத்த கல்லுகான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முத்தம்மாள், இவர்களுக்கு பவித்ரா, காவியா என்ற மகள்களும், தனுஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சண்முகம் - முத்தம்மாள் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த முத்தம்மாள், தனது குழந்தைகள் காவியா, தனுஷ் ஆகியோருக்கு, பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துள்ளார். பின்னர் முத்தம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். அவர்கள், குழந்தைகள் காவியா, தனுஷ் ஆகிய 2 பேரையும் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து