/* */

கனமழையால் 'அத்திப்பட்டி'யாக மாறிய குமரி மாவட்ட கிராமங்கள்

தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில், 12 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

கனமழையால் அத்திப்பட்டியாக மாறிய குமரி மாவட்ட கிராமங்கள்
X

குமரியில் கனமழை நீடித்து வருகிறது. வீடு ஒன்றினுள் புகுந்த மழை வெள்ளத்தை, மிரட்சியுடன் பார்க்கும் பெண். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையானது, பல மணி நேரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளத்தோடு காட்டாற்று வெள்ளத்தில் தரை பாலங்கள், சாலைகள் மூழ்கியதால் குமரியில் 12 மலை கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன.

இதேபோல், களியல், குலசேகரம் உள்ளிட்ட 7 ஊர்களுக்கான பொது போக்குவரத்து முடங்கி உள்ளது. கோதையாறு காட்டாற்று வெள்ளத்தால் அருமநல்லூர், தெரிசனன்கோப்பு, ஞானம், உட்பட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் உருவாக்கி உள்ள நிலையில் இந்த காட்டாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் களியல், திருநந்திக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 80 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

Updated On: 17 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...