/* */

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ சுந்தர்

காவாந்தண்டலம் மற்றும் மேல்பேரமநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ  சுந்தர்
X

காவந்தண்டலம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரால் திறக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையம்.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் அமைக்கபட்டுள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.

ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சொர்ணவாரி பருவத்தில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளால் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை காலம் வந்துள்ளதால், கொள்முதல் செய்ய தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட அரசு ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை துவக்கியது. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிலைய பணியினை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காவந்தண்டலம். மற்றும் மேல்பேரமநல்லூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளை துவக்கி வைத்தார். கடந்த பருவத்தில் 62 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான கோடிக்கணக்கான பணம் அவர்களுக்கு வழங்கப்பட்டது‌ கூறிப்பிடத்தக்கது.

மேல்பேரமநல்லூர் பகுதியில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்.

அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு பணம் அளித்தது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் இந்த பருவ கொள்முதலையும் முறைகேடின்றி மேற்கொள்ள ஊழியர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யப்பிரியா இளமதி, ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன் , ஒன்றிய செயலாளர் குமணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாவிஜயகுமார், கமலக்கண்ணன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அசோகன், திமுக நிர்வாகிகள் ராஜகோபால், தட்சிணாமூர்த்தி, திருநாவுக்கரசு, ஓம்சக்திவரதன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை