/* */

பெருந்துறை அருகே பேருந்து மோதி பெண் பலி

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே பேருந்து மோதி பெண் பலி
X

பைல் படம்.

பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து சரவணன். இவர் மனைவி சசிகலா (வயது 64). சம்பவத்தன்று கணவன்-மனைவி 2 பேரும் மூங்கில்பாளையத்திலிருந்து விஜயமங்கலம் வருவதற்காக தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். விஜயமங்கலம் ஊத்துக்குளி பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டர்சைக்கிளில் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சசிகலா நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பஸ் டயர் அவர் மீது ஏறியது.

உடனடியாக, அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் அடிபட்ட முத்து சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 14 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு