Begin typing your search above and press return to search.
பவானி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பவானி அருகே தீக்குளித்த பெண், சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூமதி. கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக, மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, பூமதி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதனையடுத்து, முதலுதவி சிகிச்சைக்கு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பூமதி சிகிச்சை பலனின்றி, இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.