ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
![ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள்](https://www.nativenews.in/h-upload/2024/06/30/1921361-picsart24-06-3016-01-16-373.webp)
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் நலத்திட்ட உதவிகளை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் திமுக மற்றும் சார்பு அணிகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆதரவற்ற முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் கொங்கு அறிவாலயம் உட்பட பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இமயம் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு நலத்திட்ட வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக தலைமை கழக பேச்சாளர் இளையகோபால், மாவட்ட சுற்று சூழல் அணி தலைவர் பரமசிவம், துணை அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி, சுற்றுச்சூழல் அணி நகர துணை அமைப்பாளர் கங்கா கண்ணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu